Home One Line P1 முன்னாள் திரெங்கானு மந்திரி பெசார் காலமானார்

முன்னாள் திரெங்கானு மந்திரி பெசார் காலமானார்

474
0
SHARE
Ad

கோலா திரெங்கானு: முன்னாள் திரெங்கானு மந்திரி பெசார் வான் மொக்தார் அகமட் இன்று காலை 6.20 மணியளவில் கோலாலம்பூரில் பிரின்ஸ் கோர்ட் மருத்துவ மையத்தில் காலமானார்.

இருதயப் பிரச்சனையால் அவர் காலமானார்.

இச்செய்தியை அவரது மகன் வான் அப்துல் ஹாகீம் முகநூல் பக்கத்தில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

ஷா ஆலாம், பிரிவு 21 இஸ்லாமிய கல்லறையில் அவரது நல்லுடல் அடக்கம் செய்யப்படும்.

வான் மொக்தார், 88, கோலா திரெங்கானுவைச் சேர்ந்தவர். 1974 முதல் 1999 வரை 25 ஆண்டுகள் திரெங்கானு மந்திரி பெசாராக பணியாற்றினார்.