Home நாடு வெள்ளம் மோசமடையும் 3 தீபகற்ப மாநிலங்கள் – கிளந்தான், திரெங்கானு, பகாங்

வெள்ளம் மோசமடையும் 3 தீபகற்ப மாநிலங்கள் – கிளந்தான், திரெங்கானு, பகாங்

202
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இடைவிடாத தொடர் மழையால் தீபகற்ப மலேசியாவின் கிளந்தான், திரெங்கானு, பகாங் ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 13 ஆறுகளின் நீர்மட்டம் இன்று புதன்கிழமை (டிசம்பர் 27) அபாயகட்டத்தைத் தாண்டியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுங்கை பகாங், சுங்கை தெம்பலிங், சுங்கை கெராத்தோங், சுங்கை பகாங், சுங்கை ரொம்பின் சுங்கை லுயிட் ஆகியவை உள்ளிட்ட ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

கிளந்தானின் சுங்கை கோலோக், திரெங்கானுவின் சுங்கை டுங்குன், சுங்கை கெமாமான், ஆகிய ஆறுகளும் கடும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

மற்ற மாநிலங்களில் உள்ள 23 ஆறுகளிலும் அபாயகரமான அளவில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

சரவாக் மாநிலத்திலும் வெள்ள அபாயம் ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.