Home One Line P1 ‘சபா கொவிட்19 சம்பவங்களுக்கு ஷாபியே காரணம்!’- நஜிப்

‘சபா கொவிட்19 சம்பவங்களுக்கு ஷாபியே காரணம்!’- நஜிப்

850
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அண்மையில் நடந்த சபா மாநிலத் தேர்தலைத் தொடர்ந்து கொவிட்19 சம்பவங்கள் அதிகரித்ததற்கு தேசிய முன்னணி, மற்றும் தேசிய கூட்டணியைக் குற்றம் சாட்டுவது நியாயமற்றது என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கூறுகிறார்.

சபாவில் பிரச்சாரத்திற்கு அரசியல்வாதிகள் இருந்தது சிக்கலானது என்பதை ஒப்புக் கொண்ட நஜிப்,  வாரிசான் தலைவரும், முன்னாள் சபா முதலைமைச்சருமான ஷாபி அப்டால்தான் தேர்தலுக்கு விரும்பியதாகக் கூறினார்.

“தேசிய கூட்டணி மற்றும் தேசிய முன்னணியை மட்டுமே குறை கூறுவது நியாயமற்றது, ஏனென்றால் சபா மாநிலத் தேர்தல் நடைபெற நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை. பல நம்பிக்கைக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் ஷாபி மீதான நம்பிக்கையை இழந்து மூசா அமான் தலைமையிலான குழுவில் இடம் பிடித்ததால் தேர்தல் தூண்டப்பட்டது.

#TamilSchoolmychoice

“அவருக்கு தெளிவான பெரும்பான்மை இருந்தபோதிலும், சபா ஆளுநர் மூசாவை முதலமைச்சராகப் பெற மறுத்துவிட்டார். மூசா மாநில அரண்மனைக்குள் நுழைவதைத் தடுத்தார்.

“அதற்கு பதிலாக, தேர்தல்களுக்கு வழிவகுக்கும் வகையில் மாநில சட்டமன்றம் கலைக்க ஷாபியின் ஆலோசனையை ஆளுநர் பின்பற்றினார்,” என்று அவர் இன்று தமது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

தேர்தலை மூன்று முறை நீதிமன்றத்தில் ஒத்திவைக்க முயன்ற நிலையில், மாநில சட்டமன்றத்தைக் கலைக்க ஷாபியின் கோரிக்கையை மூசா எதிர்த்ததாக நஜிப் கூறினார்.

“ஷாபி கவலைப்படவில்லை. அதற்கு பதிலாக, கொவிட்19 தொற்றுக்கு ஆளானவர்களும் வாக்களிக்க அனுமதிக்குமாறு ஷாபி கேட்டுக் கொண்டார். அதே நேரத்தில் சபாவில் கொவிட்19 சம்பவங்களின் அதிகரிப்பு போலியானது என்று வாரிசான் தலைவர் ஒருவர் முகமடின் கெத்தாபி கூறியிருந்தார்.

சபாவிலிருந்து திரும்பி வருபவர்களுக்கு முன்மொழியப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை பல நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள் எதிர்த்ததாக அவர் கூறினார். இது வாக்காளர்களை பயமுறுத்தும் மற்றும் அவர்களின் ஜனநாயக வாக்களிக்கும் உரிமையை நசுக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

“இறுதியில், மாநில சட்டமன்றம் கலைத்து, தேர்தலுக்கு அழைப்பு விடுத்ததற்காக ஷாபி அவர்களே மன்னிப்பு கேட்டார்.”

தேசிய முன்னணி, தேசிய கூட்டணி தலைவர்களுக்கு காபுங்கான் ராக்யாட் சபாவுக்கு பிரச்சாரத்திற்கு உதவுவதைத் தவிர வேறு வழியில்லை என்று நஜிப் கூறினார்.

“ஆயினும்கூட, சுகாதார அமைச்சிலும், கொவிட்19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய கூட்டணி அரசாங்கத்தின் திறனில் எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது,” என்று அவர் கூறினார்.