Home One Line P1 உயர் கல்வி நிறுவனங்களில் நேர்முகப் பதிவை நிறுத்தி வைக்க உயர் கல்வி அமைச்சு கோரிக்கை

உயர் கல்வி நிறுவனங்களில் நேர்முகப் பதிவை நிறுத்தி வைக்க உயர் கல்வி அமைச்சு கோரிக்கை

480
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்19 சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, வளாகத்திற்குச் செல்லும் புதிய மற்றும் பழைய மாணவர்களின் நேர்முகப் பதிவு ஒத்திவைக்க அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் உயர் கல்வி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

இந்த மாத இறுதி வரை அல்லது புதிய அறிவிப்பு வரும் வரை, அனைத்து மாணவர் பதிவு விஷயங்களும் இயங்கலையில் மேற்கொள்ளப்பட வேண்டும், அதே போல் கற்பித்தல் மற்றும் கற்றல் அம்சங்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

“அனைத்து தரப்பினரின் நல்வாழ்வையும் பாதுகாப்பையும் பாதுகாக்க, சம்பந்தப்பட்ட மாணவர்களுடன் பதிவு செய்வதை உடல் ரீதியாக அல்லது நேருக்கு நேர் ஒத்திவைக்கும் முடிவு எடுக்கப்பட வேண்டும்” என்று அது இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

முன்னதாக, கொவிட்19 சம்பவங்களின் எண்ணிக்கை நேற்று அதிகரித்ததைத் தொடர்ந்து சுகாதார இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தினார்.

ஜூன் 4- ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட 277 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில், நேற்றைய தொற்று எண்ணிக்கை 2-வது உயர்ந்த தொற்று எண் ஆகும்.

ஏற்கனவே வளாகத்தில் உள்ள மற்றும் கல்வி நடவடிக்கைகளைப் பின்பற்றும் மாணவர்கள் அந்தந்த வளாகங்களில் தங்கலாம் என்று அமைச்சு இன்று தெரிவித்தது.

“வளாகத்திற்கு திரும்புவது மற்றும் கற்பித்தல் மற்றும் கற்றல் அமர்வுகள் தொடர்பான எந்தவொரு கேள்வியும் அந்தந்த கல்வி நிறுவனங்களுடன் நேரடியாக அணுகலாம்.”

வளாகத்திற்குள் கூட்டங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் நடவடிக்கைகளையும் கல்வி நிறுவனங்கள் ஒத்திவைக்க வேண்டும் என்றும் அமைச்சு பரிந்துரைத்துள்ளது.