Home One Line P2 தமிழ் நாடு, ஆந்திரா, கர்நாடகா காடுகளில் ஐஎஸ் உருவாக்கம்

தமிழ் நாடு, ஆந்திரா, கர்நாடகா காடுகளில் ஐஎஸ் உருவாக்கம்

627
0
SHARE
Ad

புது டில்லி: அல்-ஹிந்த் பிரிவு என அழைக்கப்படும் தென்னிந்தியாவில் இயங்கும் ஐஎஸ்- இன் ஒரு பிரிவு, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரள காடுகளுக்குள் ஐஎஸ்ஐஎஸ் “டாய்ஷ் கட்டுப்பாட்டு வட்டாரத்தை” உருவாக்க திட்டமிட்டிருந்ததாக தேசிய விசாரணை நிறுவனம் (என்ஐஏ) தெரிவித்துள்ளது.

இந்த பிரிவைச் சேர்ந்த 17 உறுப்பினர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளதாக அது கூறியது.

இந்த பயங்கரவாதக் குழு எப்போதுமே இஸ்லாமிய நாடுகளை கட்டுப்படுத்தும் போக்கைக் கொண்டிருந்தாலும், ஐஎஸ்ஐஎஸ் சதித்திட்டத்தை இந்தியாவில் கண்டுபிடித்தது இதுவே முதல் முறையாகும்.

#TamilSchoolmychoice

கடந்தாண்டு 2019 டிசம்பர் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்து மத மற்றும் அரசியல் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் இந்தியா முழுவதிலும் உள்ள உயர்மட்ட நபர்களை குறிவைத்து கொலை செய்வது இவர்களின் நோக்கமாக இருந்துள்ளது.

“2014-2015- ஆம் ஆண்டில் அதன் பிரதான நிலையில், அபுபக்கர் அல்-பாக்தாதி தலைமையிலான உலகளாவிய பயங்கரவாத அமைப்பான இஸ்லாமிய அரசு, ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் ஒரு குறிப்பிடத்தக்க நிலப்பரப்பைக் கட்டுப்படுத்த முடிந்தது. இந்த செயல்பாடு நூற்றுக்கணக்கான இந்திய இளைஞர்களை பாதித்தது. அவர்களில் சிலர் இவர்கள் வசமுள்ள பகுதிகளுக்கு பயணம் செய்தனர். அதே நேரத்தில் பலர் வெவ்வேறு நகரங்களில் தாக்குதல்களை நடத்த அங்கு தங்கினர். எவ்வாறாயினும், கடந்த ஆறு ஆண்டுகளில், இந்தியாவில் ஒரு நிலப்பரப்பை உருவாக்கும் திட்டம் இருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், ” என்று அடையாளம் காண விரும்பாத அதிகாரி கூறினார்.

பெங்களூரு, குருப்பன்பால்யாவில் உள்ள பாஷாவின் அல்-ஹிந்த் அறக்கட்டளை அலுவலகத்தில் இருந்து இயங்கும் அல்-ஹிந்த் பிரிவினர், இந்த ஆண்டு ஜனவரியில் டில்லி, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல சோதனைகளின் வழி அமலாக்கப் பிரிவினால் கண்டுபிடிக்கப்பட்டனர்.