Home One Line P2 பிக்பாஸ் 4 : முதல் பங்கேற்பாளராக ரேகா வெளியேற்றப்பட்டார்

பிக்பாஸ் 4 : முதல் பங்கேற்பாளராக ரேகா வெளியேற்றப்பட்டார்

984
0
SHARE
Ad

சென்னை : ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாகத் திகழும் பிக்பாஸ் தொடரில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 18) நடந்த நிகழ்ச்சியில் வெளியேற்றப்படும் முதல் பங்கேற்பாளர் நடிகை ரேகா ஆவார்.

கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

முதல் வாரத்துக்கான நிகழ்ச்சி முடிவடைந்து போட்டியாளர்கள் யாரும் வெளியேற்றப்படவில்லை. இரண்டாவது வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் உள்ளே புதிதாக நுழைந்திருப்பவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான அர்ச்சனா.

#TamilSchoolmychoice

தமிழ்நாட்டின் ஸீ தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக இருக்கும் அர்ச்சனா ஸ்டார் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது சுவாரசியமான திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

இரண்டாவது வாரத்தில் 7 பிரபலங்கள் வெளியேற்றப்பட முன்மொழியப்பட்டார்கள்.  ஷிவானி, சனம் ஷெட்டி, சம்யுக்தா, ரேகா, ரம்யா பாண்டியன், கேபிரியல்லா, ஆஜீத் ஆகியோரே அந்த எழுவராவர்.

சனிக்கிழமை (அக்டோபர் 17) ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இரசிகர்களால் இந்த வாரம் காப்பாற்றப்பட்டவர்கள் யார் என ஒவ்வொருவராக கமல் அறிவித்தார். அந்த அறிவிப்பை பங்கேற்பாளர் அர்ச்சனாவைக் கொண்டு கமல் வெளியிட்டார்.

அதன்படி முதலில் காப்பாற்றப்பட்டவர் ஆஜீத். இரண்டாவதாக ஷிவானியும் மூன்றாவதாக ரம்யா பாண்டியனும் இரசிகர்களால் காப்பாற்றப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி தொடங்கியதும் பல்வேறு வாதங்களை சுமார் ஒரு மணிநேரத்திற்கு நிகழ்த்திய கமல் சம்யுக்தாவும் இரசிகர்களால் காப்பாற்றப்பட்டதாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து எஞ்சியுள்ள சனம் ஷெட்டி, ரேகா ஆகிய இரண்டு போட்டியாளர்களில் பிக்பாஸ் வீட்டிலிருந்து முதன் முதலாக வெளியேற்றப்படப் போகிறவர் ரேகா என்பதை ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அறிவித்தார்.

தொடர்ந்து பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேறிய ரேகாவை கமல்ஹாசன் மேடைக்கு அழைத்து அளவளாவினார்.

இந்த முறை பலதரப்பட்ட வாழ்க்கைப் பின்னணியையும், தொழில் பின்னணியையும் கொண்ட 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். தற்போது அர்ச்சனாவும் இணைந்திருப்பதால் மொத்த போட்டியாளர்களின் எண்ணிக்கை 17 ஆக இருக்கிறது.

பிக்பாஸ் இல்லத்திலிருந்து தற்போது ..வெளியேறிவிட்டதால் எஞ்சியிருக்கும் போட்டியாளர்களின் எண்ணிக்கை 16 ஆகத் தொடர்கிறது.