Home One Line P2 இம்ரான் கானை பதவியிலிருந்து அகற்ற நாடு தழுவிய போராட்டம்

இம்ரான் கானை பதவியிலிருந்து அகற்ற நாடு தழுவிய போராட்டம்

603
0
SHARE
Ad

பாகிஸ்தான்: 2018 தேர்தல்  பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இராணுவத்தை பயன்படுத்தியதால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை வெளியேற்றுவதற்காக பல்லாயிரக்கணக்கான எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கராச்சி நகரில் ஞாயிற்றுக்கிழமை திரண்டனர்.

ஒன்பது பெரிய எதிர்க்கட்சிகள் கடந்த மாதம் பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (பி.டி.எம்) என்ற கூட்டணியை உருவாக்கி அரசாங்கத்திற்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தைத் தொடங்கின.

“பாகிஸ்தான் மக்களைப் பாதுகாக்கவும், மீட்கவும் நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்” என்று முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகளும் அரசியல் வாரிசுமான மரியம் நவாஸ் கூறினார்.

#TamilSchoolmychoice

“இந்த அரசாங்கம் தனது பதவிக் காலத்தை முடிக்க அனுமதித்தால், அது இந்த நாட்டை அழித்துவிடும்” என்று அவர் பேரணியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நேரத்தில், பணவீக்கம் இரட்டை இலக்கங்களைத் தொட்டு எதிர்மறையான வளர்ச்சியைக் கொண்டுள்ளது.

கராச்சி பேரணியில் 63 வயதான பாக்கீர் பலோச் கூறுகையில், “ஏழை குடிமக்கள் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த அரசாங்கம் இப்போது செல்ல வேண்டிய நேரம் இது.” என்று கூறினார்.

பாகிஸ்தானின் அடுத்த பொதுத் தேர்தல் 2023- இல் திட்டமிடப்பட்டுள்ளது.