Home One Line P1 புதிய நிபந்தனைகள் குறித்து சாஹிட்-மொகிதின் சந்தித்துள்ளனர்

புதிய நிபந்தனைகள் குறித்து சாஹிட்-மொகிதின் சந்தித்துள்ளனர்

472
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய கூட்டணி  தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிப்பதற்கான கட்சியின் “புதிய நிபந்தனைகள்” குறித்து அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி பிரதமர் மொகிதின் யாசினை சந்தித்துள்ளார் என்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்த விவரங்களை அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர் அனுவார் மூசா வழங்கவில்லை. ஆனால், அம்னோவின் புதிய நிபந்தனைகள் குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறினார்.

முன்னதாக, அம்னோ தேசிய கூட்டணிக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெறுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும், தொடர்ந்து அரசியல் ஒத்துழைப்புக்காக அரசாங்கத்திற்கு சில புதிய நிபந்தனைகளை வகுத்துள்ளதாகவும் கூறினார்.

#TamilSchoolmychoice

அண்மையில், தேசிய கூட்டணியைக் காப்பாற்றும் முயற்சியில் அதனுடனான அரசியல் ஒத்துழைப்பு குறித்த புதிய நிபந்தனைகளை விவரிக்குமாறு மொகிதின் யாசின் அம்னோவிடம் கேட்டுக் கொண்டார்.

பெர்சாத்து பொதுச் செயலாளர் ஹம்சா சைனுடின் மூலம் அம்னோவுக்கு அனுப்பப்பட்ட மொகிதின் எழுதிய கடிதத்தில் இந்த கோரிக்கை கூறப்பட்டதாக  அம்னோ பொதுச் செயலாளர் அகமட் மஸ்லான் தெரிவித்திருந்தார்.

“கடந்த புதன்கிழமை மாலை பிரதமருக்கும், அம்னோ பொதுச் செயலாளர், பொருளாளருக்கும் இடையே ஒரு காணொலி அமர்வைத் தொடர்ந்து இந்த கோரிக்கை இருந்தது.

“அமர்வில், கடந்த செவ்வாயன்று அம்னோ உச்சமன்ற அரசியல் பிரிவுக் கூட்டத்தின் முடிவின் அடிப்படையில் எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தின் மூலம் அரசியல் ஒத்துழைப்பைத் தொடர டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தலைமையில் அரசாங்கத்திற்கு புதிய நிபந்தனைகள் தொடர்பான விஷயங்கள் விவாதிக்கப்பட்டன” என்று அவர் கூறினார்.

“தேசிய முன்னணி 59 எண்ணிக்கையிலான நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளதாக எண்ணிக்கையைக் கொண்டுள்ளது என்ற உண்மையை மட்டுமே நான் முன்வைக்கிறேன்.

“சபா மாநில தேர்தலுக்கு பின்னர் எழுதப்பட்ட ஒப்பந்தம் இருக்க வேண்டும் என்று அம்னோ ஆய்வு செய்த பின்னர் புதிய நிபந்தனைகள் செய்யப்பட்டன” என்று அவர் கூறியிருந்தார்.