Home One Line P1 பேராக்கில் கூடுதல் 3 பள்ளிகள் மூட உத்தரவு

பேராக்கில் கூடுதல் 3 பள்ளிகள் மூட உத்தரவு

699
0
SHARE
Ad

ஈப்போ: பேராக்கில் உள்ள மூன்று பள்ளிகள் தங்கள் மாணவர்களிடையே கொவிட் -19 தொற்று காரணமாக இன்று முதல் ஏழு நாட்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளன.

பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரஸ்மான் சாகாரியா பாரிட் புந்தாரில் தானா கெபுன் தேசிய பள்ளி, கிளெபாங் ஜெயா தேசிய பள்ளி மற்றும் ஈப்போ செமோரில் உள்ள அமினுடின் பாகி இடைநிலைப்பள்ளி இதில் அடங்கும்.

கடந்த வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்ட பள்ளிகளின் மாணவர்கள் கொவிட் -19 தொற்றுக்கு ஆளானதாக தனக்கு அறிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“அக்டோபர் 25- ஆம் தேதி வரை பள்ளிகளை ஏழு நாட்கள் மூடுமாறு உத்தரவிட்ட கடிதம் மாநில கல்வித் துறையால் வெளியிடப்பட்டது மற்றும் துப்புரவு மற்றும் கிருமி நீக்கம் செய்யும் பணிகளை எளிதாக்க சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டது,” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இதற்கிடையில், லாருட், மாதாங் மற்றும் செலாமா மாவட்டங்களில் உள்ள ஆறு பள்ளிகள் கடந்த வாரம் முழுவதும் மூடப்பட்டன.