Home One Line P1 சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அமைச்சர்கள் வருகை

சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அமைச்சர்கள் வருகை

562
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வழக்கமாக புதன்கிழமை நடைபெறும் அமைச்சர்கள் சந்திப்பிற்கு பதிலாக, இன்று வியாழக்கிழமை சிறப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள தேசிய கூட்டணியின் அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினின் வாகனம் காலை 8.57 மணிக்கு பெர்டானா புத்ராவுக்குள் நுழைந்தது. அதைத் தொடர்ந்து மற்ற அமைச்சர்களும் வந்தனர்.

பிரதமர் தனது இரண்டாவது தனிமைப்படுத்தலை முடித்த பின்னர் நடத்தப்படும் முதல் கூட்டம் இதுவாகும்.

#TamilSchoolmychoice

நேற்று புதன்கிழமை, அவர்கள் அனைவரும் இயங்கலை வாயிலாக ஓர் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினர்.

இன்றைய சிறப்புக் கூட்டம் அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்ததாக இருக்கும் என்ற வதந்தியை ஏந்தியுள்ளது.