Home One Line P1 கொவிட்19: புதிய சம்பவங்கள் 799 – 3 பேர் மரணம்

கொவிட்19: புதிய சம்பவங்கள் 799 – 3 பேர் மரணம்

669
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 799 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன.

இவை அனைத்துமே உள்ளூரிலேயே காணப்பட்ட தொற்றுகளாகும். வெளிநாட்டுத் தொற்றுகள் எதுவும் இதில் இல்லை.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 30,889 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

277 தொற்றுகளுடன் அதிக தொற்றுகளைக் கொண்ட மாநிலமாக சபா இருந்து வருகிறது. சிலாங்கூரில் 135 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

491 பேர் இன்று குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறி உள்ள நிலையில், மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 20,248 – ஆக உயர்ந்துள்ளது.

சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இந்த விவரங்களை வெளியிட்டார்.

மொத்தம் 10,392 பேர் மருத்துவமனைகளில் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 90 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர், 20 பேருக்கு சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இன்று புதிதாக 3 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து மொத்த மரணங்களின் எண்ணிக்கை 249- ஆக அதிகரித்துள்ளது.