Home One Line P1 கொவிட்19: 8 பேர் மரணம்- புதிதாக 1,032 சம்பவங்கள் பதிவு

கொவிட்19: 8 பேர் மரணம்- புதிதாக 1,032 சம்பவங்கள் பதிவு

513
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை கடந்த 24 மணி நேரத்தில் 1,032 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன.

இதில் உள்ளூர் தொற்றுகள் 1,029 சம்பவங்கள் ஆகும். வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்களில் 3 பேருக்கு தொற்றுக் கண்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 35,425 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

646 தொற்றுகளுடன் அதிக தொற்றுகளைக் கொண்ட மாநிலமாக சபா இருந்து வருகிறது. சிலாங்கூரில் 231 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

இன்று 820 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறி உள்ளனர்.

இதனிடையே, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 24,815– ஆக உயர்ந்துள்ளது.