Home One Line P1 கொவிட்19: புதிய சம்பவங்கள் 1,168 – 3 பேர் மரணம்

கொவிட்19: புதிய சம்பவங்கள் 1,168 – 3 பேர் மரணம்

746
0
SHARE
Ad

noor-hisham-health-min-07072020கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,168 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன.

இவை அனைத்தும் உள்ளூர் தொற்றுகள் ஆகும். வெளிநாட்டு தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 39,357 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

இன்று 1,029 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறி உள்ளனர்.

இதனிடையே, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 27,409 ஆக உயர்ந்துள்ளது.

இன்னமும், 11,666 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 87 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 32 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்று 3 பேர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 282-ஆக உயர்ந்துள்ளது.