Home One Line P1 கொவிட்19 சம்பவங்களின் உண்மை தரவுகளை அரசு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்

கொவிட்19 சம்பவங்களின் உண்மை தரவுகளை அரசு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்

489
0
SHARE
Ad

கோலாலம்பூர்: எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், கொவிட் -19 தொற்று தொடர்பான தரவுகளை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார். நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை செயல்படுத்துவதை பொதுமக்களை நம்ப வைக்க இந்த தரவுகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

தரவுகளை வெளியிடுவதில் அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையை பொதுமக்கள் இப்போது மறுக்கத் தொடங்கியுள்ளதாக அன்வார் கூறினார்.

“நான் திறந்த தரவைக் கேட்கிறேன். வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும், எடுத்துக்காட்டாக சிலாங்கூரில் ஏழு சம்பவங்கள் உள்ளன, பெட்டாலிங் ஜெயாவில் இருந்தால், எங்கே, என்பதை அறிய விரும்புகிறோம்.

#TamilSchoolmychoice

“திறந்த தரவு மற்றும் தெளிவான தகவல்கள் இருக்கும்போது, ​​மக்கள் அதிக நம்பிக்கையுடன் உள்ளனர். இப்போது பலர் வாதிட ஆரம்பித்துள்ளனர்,” என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.