Home One Line P1 கொவிட்19: புதிய சம்பவங்கள் 1,208 – மூன்று மரணங்கள்!

கொவிட்19: புதிய சம்பவங்கள் 1,208 – மூன்று மரணங்கள்!

972
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,208 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. இவற்றில் உள்ளூர் தொற்றுகள் 1,202 ஆகும். வெளிநாட்டிலிருந்து 6 தொற்றுகள் பீடிக்கப்பட்டிருக்கின்றன.

தொடர்ந்து 3-வது நாளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்று சம்பவங்கள் நாட்டில் பதிவாகியிருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 47,417 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

இன்று 1.013 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 34,785 ஆக உயர்ந்துள்ளது.

இன்னமும், 12,323 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 104 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 42 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்று 3 பேர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 309-ஆக உயர்ந்துள்ளது.

மிக அதிகமான தொற்றுகளை 475 சம்பவங்களோடு ஆச்சரியகரமான அளவில் கோலாலம்பூர் பதிவு செய்துள்ளது. இது சபா மாநில எண்ணிக்கையைவிடக் கூடுதலாகும். இன்று சபாவில் 381 தொற்று சம்பவங்களே பதிவாகியிருக்கின்றன.

இந்தத் தகவல்களை சுகாதார இலாகாவின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்தார்.