Home One Line P1 மதங்களை அவமதிப்பது போன்ற குற்றங்களுக்கு புதிய சட்டங்கள் தேவையில்லை!

மதங்களை அவமதிப்பது போன்ற குற்றங்களுக்கு புதிய சட்டங்கள் தேவையில்லை!

419
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மதப் பிரச்சனைகள், மதங்களை அவமதிப்பது, கேலி செய்வது போன்ற குற்றங்களைச் சமாளிக்க தற்போதுள்ள சட்டம் போதுமானது என்று புத்ராஜெயா இன்று கூறியது.

தேசத்துரோக சட்டம் 1948, தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998 போன்ற சட்ட விதிகளின் அடிப்படையில், குற்றங்களைச் செய்த நபர்களைக் கைது செய்து வழக்குத் தொடுப்பதன் மூலம் காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என்று துணை உள்துறை அமைச்சர் இஸ்மாயில் முகமட் சைட் மக்களவையில் தெரிவித்தார்.

“மதம் மற்றும் இனவாதம் போன்ற முக்கியமான பிரச்சனைகளை கேலி செய்யாமல் இருக்க, தற்போதுள்ள சட்டம் மக்களுக்கு ‘தடுப்பு’ வடிவமாக போதுமானது. ஆனால், அதை மேம்படுத்துவதற்கான சட்டத்தை அவ்வப்போது அமைச்சகம் மறுபரிசீலனை செய்து வருகிறது, ” என்று இஸ்மாயில் கூறினார்.

#TamilSchoolmychoice

இன மற்றும் மத உணர்திறன் சம்பந்தப்பட்ட கூறுகள் தேசத்துரோக சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் இருக்கக்கூடும் என்று நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக இஸ்மாயில் கூறினார்.