Home One Line P1 கொவிட்19: நால்வர் மரணம்- புதிதாக 1,290 சம்பவங்கள் பதிவு

கொவிட்19: நால்வர் மரணம்- புதிதாக 1,290 சம்பவங்கள் பதிவு

427
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை, கடந்த 24 மணி நேரத்தில் 1,290 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. இவற்றில் உள்ளூர் தொற்றுகள் 1,285 ஆகும். வெளிநாட்டிலிருந்து 5 தொற்றுகள் பீடிக்கப்பட்டிருக்கிறன.

நேற்று 600-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் மட்டுமே பதிவாகி இருந்தன.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 51,680 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

சிலாங்கூரில் மட்டும் 407 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. சபாவில் மட்டும் 660 தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இன்று 878 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 38,132- ஆக உயர்ந்துள்ளது.

இன்னமும், 13,222 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 110 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 37 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்று நால்வர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 326-ஆக உயர்ந்துள்ளது.