Home One Line P2 பிக்பாஸ் 4 : பாடகி சுசித்ரா வெளியேற்றப்பட்டார்

பிக்பாஸ் 4 : பாடகி சுசித்ரா வெளியேற்றப்பட்டார்

1157
0
SHARE
Ad

சென்னை : ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் 50 நாட்களைக் கடந்து உலகத் தமிழ் தொலைக்காட்சி இரசிகர்களிடையே பிரபலமாகியுள்ள பிக்பாஸ் (4) தொடரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) ஒளியேறிய நிகழ்ச்சியில் பிக்பாஸ் இல்லத்திலிருந்து பாடகி சுசித்ரா வெளியேற்றப்பட்டார்.

கடந்த இரண்டு வாரங்களாக பிக் பாஸ் இல்லத்திலிருந்து யாரும் வெளியேற்றப்படவில்லை. ஆகக் கடைசியாக சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேற்றப்பட்டார். முதலாவதாக நடிகை ரேகா வெளியேற்றப்பட்டார்.

கடந்த வாரம் தீபாவளிக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பிக்பாஸ் இல்லத்திலிருந்து யாரும் வெளியேற்றப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து இந்த வாரத்தில் 7 பேர் வெளி வெளியேற்றப்பட பரிந்துரைக்கப்பட்டனர்.

ஆரி, ரியோ, பாலாஜி, சம்யுக்தா, சோம் சேகர், அனிதா, சுசித்ரா ஆகியோரே அந்த 7 பேர்களாவர்.

இதில் ஆரி,ரியோ இருவரும் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காப்பாற்றப்பட்டிருப்பதாக கமல்ஹாசன் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் எஞ்சிய ஐவரான பாலாஜி, சம்யுக்தா, சோம் சேகர், அனிதா, சுசித்ரா ஆகியோரில் இருந்து ஒருவர் வெளியேற்றப்படும் சூழல் உருவாகியது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் பெரும்பான்மை இரசிகர்களின் வாக்களிப்புக்கு ஏற்ப பாடகி சுசித்ரா வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். அதன் பின்னர் அவர் சுசித்ராவை மேடைக்கு அழைத்து நிகழ்ச்சி குறித்த அவரது அனுபவங்களையும், சக பங்கேற்பாளர்களுடனான அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.