Home One Line P2 பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டில்லிக்குச் சென்றனர்

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டில்லிக்குச் சென்றனர்

457
0
SHARE
Ad

புது டில்லி: செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட மூன்று விவசாயச் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான எதிரொலிகளுடன் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வெள்ளிக்கிழமை இந்திய நாட்டின் தலைநகருக்கு அணித் திரண்டுள்ளனர்.

வியாழக்கிழமை காவல் துறையினருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் இடையில் உயர் மோதல் ஏற்பட்டது. அவர்கள் டில்லியின் அருகிலுள்ள பகுதிகளான பானிபட், சிர்சா, குருக்ஷேத்ரா, பதேஹாபாத் மற்றும் ஜிந்த் போன்ற பகுதிகளுக்குள் நுழைந்தனர்.

#TamilSchoolmychoice

விவசாயிகள், பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள். தங்கள் “டில்லி சாலோ” அணிவகுப்பில், விவசாயச் சட்டங்களை அனுமதிப்பது குறித்த தங்கள் ஆட்சேபனைகளைக் கேட்க ஆளும் கட்சியைக் கோருகின்றனர்.

இந்த சட்டத்தின் மூலமாக, விவசாய வணிகங்களுக்கு தடையின்றி விவசாய விளைபொருட்களை சுதந்திரமாக வர்த்தகம் செய்ய வழிவகுத்துள்ளன. தனியார் வர்த்தகர்கள் எதிர்கால விற்பனைக்கு அதிக அளவு அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைப்பதற்கும், ஒப்பந்த விவசாயத்திற்கான புதிய விதிகளையும் இது வகுத்துள்ளது.

கடந்த 12-15 மணி நேரத்தில், விவசாயிகள் டில்லிக்கு நெருக்கமாக சென்றுள்ளனர். டில்லி காவல் துறையினர் பாதுகாப்புப் பணியாளர்கள், மணல் நிறைந்த லாரிகள் மற்றும் நீர் பீரங்கிகளை தயார் நிலையில் வைத்திருக்கின்றனர்.

மையத்தின் புதிய பண்ணை சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் தேசிய தலைநகரின் எல்லைகளை அடைந்தால் டில்லியில் நுழைய அனுமதிக்க மாட்டார்கள் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.