Home One Line P1 சபா ஆளுநருக்கு எதிரான வழக்கை ஹாஜிஜி நூர் உட்பட 33 பேர் கைவிட்டனர்

சபா ஆளுநருக்கு எதிரான வழக்கை ஹாஜிஜி நூர் உட்பட 33 பேர் கைவிட்டனர்

412
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஜூலை மாதம் மாநில சட்டமன்றத்தை கலைக்க சபா மாநில ஆளுநர் ஜூஹர் மஹிருடின் அளித்த ஒப்புதலுக்கு எதிராக சபா முதல்வர் ஹாஜிஜி நூர் உட்பட முப்பத்து மூன்று நபர்கள் தங்கள் நீதிமன்ற வழக்கை கைவிட்டனர்.

ஆயினும், ஹாஜிஜி மற்றும் மற்றவர்களுக்கான வழக்கறிஞர், தங்கள் வாடிக்கையாளர்கள், சபா அரசியலமைப்பு மற்றும் கொவிட் -19 பாதிப்பின் அபாயம் ஆகிய இரண்டிலும் சட்டமன்ற கலைப்பு தவறானது என்ற தங்கள் வாதத்தில் உறுதியாக உள்ளதாகத் தெரிவித்தார்.

கூட்டரசு நீதிமன்றத்தில் இன்று இடைநிறுத்த கடிதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அண்மையில் நடந்த சபா மாநிலத் தேர்தல் மற்றும் அடுத்தடுத்த கொவிட் -19 பாதிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரம் திரும்பப் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

33 விண்ணப்பதாரர்களில் பலர் மீண்டும் மாநில சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர் அல்லது இப்போது மாநில அரசாங்கத்தில் பதவிகளை வகித்துள்ளனர்.

எதிர்காலத்தில் சட்டமன்றம் கலைக்கப்படக்கூடிய தெளிவான மற்றும் உறுதியான நடைமுறைகளை சபா அரசு சரிபார்த்து உருவாக்கும் என்று புரிந்து கொள்ளப்படுகிற