Home One Line P1 ஜோகூர் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 150,000 ரிங்கிட் ஒதுக்கீடு!

ஜோகூர் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 150,000 ரிங்கிட் ஒதுக்கீடு!

422
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: ஜோகூர் அரசாங்கம் நேற்று மாநிலத்தின் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கான மொத்த ஒதுக்கீட்டை 50,000 ரிங்கிட்டிலிருந்து 150,000 ரிங்கிட்டாக உயர்த்தும் என்று கூறியுள்ளது.

ஜோகூரின் 2021 வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து பேசிய, மந்திரி பெசார் ஹஸ்னி முகமட், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தங்கள் தொகுதிகளில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க உதவுவதில் மாநில அரசாங்கத்தின் அக்கறைக்கு இது சான்றாகும் என்று கூறினார்.

“எதிர்க்கட்சியின் பங்கை ஒப்புக்கொள்வது, இது ஆக்கபூர்வமானது மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கௌரவத்தை உயர்த்த உதவுகிறது. அதுமட்டுமின்றி, எதிர்க்கட்சித் தலைவருக்கு கூடுதல் அங்கீகாரம் அளிக்க, அவரது உதவித் தொகை 3,000 ரிங்கிட்டிலிருந்து 5,000 ரிங்கிட்டாக உயர்த்தப்படும். அவருக்கு நிர்வாக உதவியாளர் வழங்கப்பட வேண்டும் என்றும் நான் முன்மொழிகிறேன்,” என்று ஹஸ்னி கூறினார்.