Home One Line P1 கொவிட்-19: புதிய சம்பவங்கள் 1,229 – மரணங்கள் 4

கொவிட்-19: புதிய சம்பவங்கள் 1,229 – மரணங்கள் 4

768
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை வரையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,229  புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன.

உள்ளூரில் 1,227 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 2 சம்பவங்கள் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பெறப்பட்டதாகும்.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 83,475 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

இன்று 1,309 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 69,393-ஆக உயர்ந்துள்ளது.

இன்னும், 13,667 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 115 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 65 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மாநிலம் வாரியாக சிலாங்கூரில் அதிகமாக 435 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. சபாவில் 333 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. கோலாலம்பூரில் 131 சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.

இன்று மேலும் 4 பேர் மரணமுற்ற நிலையில் மரண எண்ணிக்கை 415-ஆக உயர்ந்துள்ளது.