Home One Line P1 மகாதீர் – துங்கு ரசாலி இணைந்து புதிய தொடக்கம்! பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிப்பு

மகாதீர் – துங்கு ரசாலி இணைந்து புதிய தொடக்கம்! பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிப்பு

440
0
SHARE
Ad
துங்கு ரசாலி – துன் மகாதீர் கோப்புப் படம்

கோலாலம்பூர் : (மாலை 4.45 மணி நிலவரம்) பெஜூவாங் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான  துன் மகாதீர் – அம்னோவின் குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் துங்கு ரசாலி இருவரும் இணைந்து இன்று திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில்  பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

பத்திரிகையாளர் சந்திப்பின் தொடக்கத்தில் உரையாற்றிய மகாதீர் அரசாங்கத்தில் நீண்ட காலமாக அமைச்சராகவும், பிரதமராகவும் பணியாற்றி அனுபவம் பெற்றவர்கள் என்ற முறையில் நாட்டின் அரசியல், பொருளாதார சிக்கலைத் தீர்க்க தாங்கள் இருவரும் கரம் கோர்க்க முன்வந்திருப்பதாகத் தெரிவித்தனர்.

பின்னர் உரையாற்றிய துங்கு ரசாலி, மகாதீர் 7-வது பிரதமரான பின்னர் அவருடன் இணைந்து அவரது தலைமையில் கலந்து கொள்ளும் முதல் பத்திரிகையாளர் சந்திப்பு இது எனத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“தற்போதுள்ள அரசாங்கம் பெரும்பான்மையில்லாத அரசாங்கம். நிலையில்லாத அரசாங்கம். இலக்கில்லாமல் செயல்படுகிறது. மக்கள் பல வகைகளிலும் சிரமப்படுகின்றனர். அன்றாடம் தொழில் செய்பவர்கள் ஒருநாள் வேலை செய்யாவிட்டால் மறு நாள் மேசையில் உண்ண உணவின்றித் தவிக்கின்றனர். நமது நாட்டில் உணவில்லாமல் யாரும் கஷ்டப்படக் கூடாது. காரணம், நமது நாடு எல்லா இயற்கை வளங்களும், செழிப்பும் உள்ள நாடு. நமது நாட்டை மீண்டும் “ஆசியாவின் புலி” என்ற பழைய பட்டப் பெயரைப் பெற நாம் பாடுபட வேண்டும்” எனவும் துங்கு ரசாலி கேட்டுக் கொண்டார்.

“இன்று தொடங்கும் எங்களின் கூட்டான பயணம் ஒரு புதிய தொடக்கம்” என்றும் துங்கு ரசாலி தெரிவித்தார்.

(மேலும் விவரங்கள் தொடரும்)