Home One Line P1 கொவிட்19: 3 பேர் மரணம்- 1,772 சம்பவங்கள் பதிவு

கொவிட்19: 3 பேர் மரணம்- 1,772 சம்பவங்கள் பதிவு

1042
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை வரையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,772 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன.

உள்ளூரில் 1,760 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 12 சம்பவம் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர் மூலம் பெறப்பட்டதாகும்.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 86,618 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

இன்று 1,084 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 71,681-ஆக உயர்ந்துள்ளது.

இன்னும், 14,515 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 118 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 56 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மாநிலம் வாரியாக கோலாலம்பூரில் அதிகமாக 696 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. சிலாங்கூரில் 503 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. சபாவில் 260 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. பேராக்கில் 110 சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.

இன்று மேலும் 3 பேர் மரணமுற்ற நிலையில் மரண எண்ணிக்கை 422-ஆக உயர்ந்துள்ளது.