Home One Line P1 கொவிட்19: புதிதாக 1,340 சம்பவங்கள் பதிவு – 4 மரணங்கள்

கொவிட்19: புதிதாக 1,340 சம்பவங்கள் பதிவு – 4 மரணங்கள்

666
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை வரையில், 24 மணி நேரத்தில் 1,340 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. நேற்று 1153 ஆக இருந்த இந்த எண்ணிக்கை இன்று மீண்டும் உயர்ந்திருக்கின்றன.

உள்ளூரில் 1,337 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 3 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பெறப்பட்டதாகும்.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 93,309 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் 1,067 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 77,309-ஆக உயர்ந்துள்ளது.

இன்னும், 15,563 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 116 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 57 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை வரை, கடந்த 24 மணி நேரத்தில் 4 மரணங்கள் கொவிட்-19 தொற்றால் ஏற்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து மரண எண்ணிக்கை 437-ஆக உள்ளது.

மாநிலம் வாரியாக தொற்றுகளின் எண்ணிக்கையில் சிலாங்கூர் இன்னும் முதல் இடத்தில் உள்ளது. மொத்தம் 441 தொற்றுகளை சிலாங்கூர் கொண்டிருக்க, அடுத்த நிலையில் கோலாலம்பூர் 284 தொற்றுகளைக் கொண்டிருக்கிறது. சபா 196 தொற்றுகளைக் கொண்டிருக்கிறது.