Home One Line P1 கொவிட்-19: புதிய சம்பவங்கள் 1,247 – 3 பேர் மரணம்

கொவிட்-19: புதிய சம்பவங்கள் 1,247 – 3 பேர் மரணம்

1010
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை வரையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,247 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. நேற்று

உள்ளூரில் 1,245 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 2 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பெறப்பட்டதாகும்.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 101,565 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

இன்று 1,441 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 82,540-ஆக உயர்ந்துள்ளது.

இன்னும், 18,576 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 108 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 47 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்று 3 பேர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 449-ஆக உயர்ந்துள்ளது.

மாநிலம் வாரியாக தொற்றுகளின் எண்ணிக்கையில் சிலாங்கூரில் மட்டும் இன்று 461 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. கோலாலம்பூரில் 140 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.சபா 225 தொற்றுகளைக் கொண்டிருக்கிறது. ஜோகூரில் திடீரென தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து 205 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் நேற்றைய தொற்றுகளின் எண்ணிக்கையான 1,581 என்பதை விட இன்றைய தொற்றுகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது.

24 டிசம்பர் வரையிலான ஒரு நாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை