உள்ளூரில் 1,245 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 2 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பெறப்பட்டதாகும்.
இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 101,565 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
இன்று 1,441 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 82,540-ஆக உயர்ந்துள்ளது.
இன்று 3 பேர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 449-ஆக உயர்ந்துள்ளது.
மாநிலம் வாரியாக தொற்றுகளின் எண்ணிக்கையில் சிலாங்கூரில் மட்டும் இன்று 461 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. கோலாலம்பூரில் 140 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.சபா 225 தொற்றுகளைக் கொண்டிருக்கிறது. ஜோகூரில் திடீரென தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து 205 ஆக அதிகரித்துள்ளது.

