Home One Line P1 கொவிட்-19: புதிய சம்பவங்கள் 2,335 – மரணங்கள் 2

கொவிட்-19: புதிய சம்பவங்கள் 2,335 – மரணங்கள் 2

817
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (டிசம்பர் 26) வரையிலான, கடந்த 24 மணி நேரத்தில் 2,335 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. இதுவரையில் பதிவான மிக அதிகமான ஒருநாள் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை இதுவெனக் கருதப்படுகிறது.

இதில் உள்ளூரில் 2,324 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 11 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பெறப்பட்டதாகும்.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 103,900 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

இன்று 874 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 83,414 – ஆக உயர்ந்துள்ளது.

இன்னும், 20,035 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 108 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 50 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்று 2 பேர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 451-ஆக உயர்ந்துள்ளது.

மாநிலம் வாரியாக தொற்றுகளின் எண்ணிக்கையில் சிலாங்கூரில் மட்டும் இன்று 710  சம்பவங்கள் பதிவாகி உள்ளன. கோலாலம்பூரில் 728 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.சபா 248 தொற்றுகளைக் கொண்டிருக்கிறது. ஜோகூரில் திடீரென தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து 412 ஆக அதிகரித்துள்ளது.