Home One Line P1 அறிகுறிகளற்ற தொற்று என்றால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்

அறிகுறிகளற்ற தொற்று என்றால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்

354
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுக்கு ஆளானது உறுதிப்படுத்தப்பட்டு, ஆனால் அது அறிகுறியற்ற தொற்றாக இருந்தால், முதலில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா அறிவுறுத்தியுள்ளார்.

போதுமான அளவு படுக்கைகள் இல்லாததால் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு சில நாட்கள் வீட்டில் சுயமாக தனிமைப்படுத்த வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார்.

“இது சபாவிலும் நடந்தது. நாங்கள் ஒரு நாளைக்கு 1,000- க்கும் மேற்பட்ட சம்பவங்களைப் பற்றி பேசுகிறோம். வெளிநாட்டுத் தொழிலாளர்களிடையே அதிகரித்த பரிசோதனைகள் காரணமாகவும், மேலும், அதிகமான சம்பவங்கள் கண்டறியப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு தொழிலாளர்களை தனிமைப்படுத்த இடமில்லை. நம்மிடம் ஆயிரக்கணக்கானவர்கள் உள்ளனர். நாங்கள் படுக்கைகளின் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்துகிறோம், ” என்று அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

நேற்றைய நிலவரப்படி நாட்டில் 1,196 தொற்று சம்பவங்கள பதிவாகி உள்ளன. இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 105,096 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

நேற்று 997 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 84,411 – ஆக உயர்ந்துள்ளது.

இன்னும், 20,233 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 111 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 50 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நேற்று ஒருவர் மட்டும் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 452-ஆக உயர்ந்துள்ளது.