Home One Line P1 கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதே பெர்சாத்துவின் நோக்கம்

கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதே பெர்சாத்துவின் நோக்கம்

420
0
SHARE
Ad
வான் சைபுல் வான் ஜான்

கோலாலம்பூர்: நேற்றிரவு நள்ளிரவுக்குப் பிறகு வெளியிட்ட ஓர் அறிக்கையில், தற்போதுள்ள அரசியல் ஒத்துழைப்பை மதிக்க வேண்டும் என்று பெர்சாத்து கட்சி, தகவல் தொடர்பு தலைவர் வான் சைபுல் வான் ஜான் கேட்டுக் கொண்டார்.

“தேசிய கூட்டணி மூலம் உருவாக்கப்பட்ட அரசியல் ஒத்துழைப்பு தொடர்ந்து மதிக்கப்படுவதையும், பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்வதற்காக அனைத்து கட்சிகளும் நேர்மையை பிரதிபலிக்க பெர்சாத்து அழைப்பு விடுக்கிறது,” என்று அவர் கூறினார்.

அம்னோவின் விருப்பமான திடீர் தேர்தல் எதிர்பார்த்தபடி விரைவில் நடக்க சாத்தியமில்லை என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

கொவிட் -19 தொற்று சிறந்த மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட மட்டத்தில் இருக்கும்போது மட்டுமே பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வான் சைபுல் கூறினார்.

“எனவே, இந்த நேரத்தில் பெர்சாத்துவின் நோக்கம், கொவிட் -19 தொற்றுநோயை நிவர்த்தி செய்து, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ஆற்றலையும் மையமாகக் கொண்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

கோலாலம்பூரில் உள்ள புத்ரா உலக வணிக மையத்தில், நேற்று இதே போன்ற கூட்டத்தை நடத்திய அம்னோ, பெர்சாத்துவுடனான உறவுகளைத் துண்டிக்க கட்சிக்கு அடிமட்ட அழுத்தம் உள்ளது என்று கூறியது. இது குறித்து வருகிற ஜனவரி 31 அன்று முடிவு செய்யப்படும் என்று கூறியது.

மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து கவனம் செலுத்த பெர்சாத்து உறுதிபூண்டுள்ளதாகவும், குறிப்பாக தற்போதைய கொவிட் -19 தொற்றுநோய் மற்றும் வெள்ளப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் என்று சைபுல் கூறினார்.

“மக்கள் ஒரு பெரிய சோதனையை சந்திக்கும் சூழ்நிலையில் தொடர்ந்து அரசியல் விளையாட்டை ஒரு சில கட்சிகள் எடுத்திருப்பது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட ஒன்றல்ல,” என்று வான் சைபுல் கூறினார்.

தேசிய கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்னோடியாக இருந்த கட்சியாகவும், உம்மா ஒருங்கிணைப்பு மற்றும் அனைத்து மக்களின் ஒற்றுமையின் அடிப்படையில் அரசாங்கத்தில் உள்ள கட்சிகளுடன் ஒப்புக் கொள்ளப்பட்ட அரசியல் ஒத்துழைப்பையும் தொடர்ந்து பராமரிக்க பெர்சாத்து உறுதிபூண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.