இதில் உள்ளூரில் 3,021 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில்,6 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பெறப்பட்டதாகும்.
இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 128,465 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
இன்று வரையிலான ஒருநாளில் 2,145 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 102,723–ஆக உயர்ந்துள்ளது.
இன்று வரையிலான ஒருநாளில் 8 பேர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 521-ஆக உயர்ந்துள்ளது.