Home One Line P1 கொவிட்-19: 3,000-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவு- 8 பேர் மரணம்

கொவிட்-19: 3,000-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவு- 8 பேர் மரணம்

423
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை (ஜனவரி 7) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 3,027 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. 3,000-க்கும் மேற்பட்ட சம்பவங்களைப் பதிவு செய்து நாடு எப்போதுமில்லாத தொற்று எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

இதில் உள்ளூரில் 3,021 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில்,6 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பெறப்பட்டதாகும்.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 128,465 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

இன்று வரையிலான ஒருநாளில் 2,145 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 102,723–ஆக உயர்ந்துள்ளது.

இன்னும், 25,221 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 142 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 63 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்று வரையிலான ஒருநாளில் 8 பேர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 521-ஆக உயர்ந்துள்ளது.