Home One Line P1 மகாதீர்- அன்வாரின் தனிப்பட்ட அரசியலிருந்து, மலேசிய அரசியல் விடுபட வேண்டும்

மகாதீர்- அன்வாரின் தனிப்பட்ட அரசியலிருந்து, மலேசிய அரசியல் விடுபட வேண்டும்

416
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட அரசியலில் இருந்து, மலேசிய அரசியல் விலகிச் செல்ல வேண்டும் என்று வாரிசான் தலைவர் ஷாபி அப்டால் தெரிவித்தார்.

எனவே, அரசியல் கட்சிகளில் நீண்ட காலம் உள்ளவர்களையும், உயரடுக்கினரையும் எதிர்க்க “புதிய இயக்கம்” உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் ஏற்பட்ட ஆட்சி கவிழ்ப்புக்கு, மகாதீருக்கும் அன்வாருக்கும் இடையிலான மோதல்தான் காரணம் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

பின்னர், இருவரின் உறவை மீட்டெடுப்பதற்கான பல முயற்சிகளும் பலனளிக்கவில்லை என்று அவர் கூறினார்.

“டாக்டர் மகாதீருக்கும், அன்வாருக்கும் இடையிலான தனிப்பட்ட அரசியலுக்கு அப்பால் நாம் செல்ல வேண்டும். அரசியல் கட்சிகளில் ஆதிக்கம் செலுத்தும் உயரடுக்கினருக்கு எதிராக அனைத்து மலேசியர்களையும் உள்ளடக்கிய ஓர் இயக்கத்தை நாம் அணிதிரட்ட வேண்டும்,” என்று ஷாபி கூறினார்.

“மலாய் ஒற்றுமையின் சொல்லாட்சி தவறான வாக்குறுதிகளை மட்டுமே நிரூபித்துள்ளது. அம்னோ, பாஸ் ஒன்றுபட்டு ஒரு வலுவான அரசாங்கத்தை உருவாக்கத் தவறிவிட்டது. மலாய் உயரடுக்கு மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்கள், சாதாரண மலாய்க்காரர்கள் என குறிவைக்கும்போது மலாய்க்காரர்களே பாதிக்கப்படுகிறார்கள்.

மலேசியாவின் புதிய பாதை, அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகம் போன்ற விவகாரங்களில் தேவைப்படுகிறது என்று அவர் கூறினார்.

“மத மற்றும் இன அரசியலுக்கு இடமில்லை. ஜனநாயகம் மூலம் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு ஒற்றுமை அடிப்படையாக இருக்க வேண்டும். இது அனைத்து பொறுப்பான கட்சிகளாலும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும், “என்று அவர் கூறினார்.