Home One Line P1 கொவிட்-19: அதிகமாக 3,337 சம்பவங்கள் பதிவு- 15 பேர் மரணம்

கொவிட்-19: அதிகமாக 3,337 சம்பவங்கள் பதிவு- 15 பேர் மரணம்

449
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை (ஜனவரி 14) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 3,337 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. தொடர்ந்து அபாயகரமான அளவில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்து வருவதை இது காட்டுகிறது.

இதில் உள்ளூரில் 3,330 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 7 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பெறப்பட்டதாகும்.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 147,855 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

இன்று வரையிலான கடந்த ஒருநாளில் 1,710 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 113,288–ஆக உயர்ந்துள்ளது.

இன்னும், 33,989 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 195 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 86 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்று ஒரே நாளில் 15 பேர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 578-ஆக உயர்ந்துள்ளது.

மாநிலங்கள் அளவில் அதிகப்படியாக சிலாங்கூரில் 1,036 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. அடுத்து ஜோகூரில் 460 சம்பவங்கள் பதிவான நிலையில், சபாவில் 389 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கோலாலம்பூர் மற்றும் பேராக்கில் முறையே 257 மற்றும் 92 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

சரவாக்கில் அதிக அளவில் 180 தொற்றுகள் பதிவாகியுள்ளன.