Home One Line P1 கொவிட்-19 தடுப்பு மருந்து பரிசோதனைக்கு 3,000 தன்னார்வலர்கள் தேவை

கொவிட்-19 தடுப்பு மருந்து பரிசோதனைக்கு 3,000 தன்னார்வலர்கள் தேவை

324
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மதிப்பிடுவதற்கு 3,000 தன்னார்வலர்களுக்கு சுகாதார அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் பயாலஜி சைனிஸ் அகாடமி ஆப் மெடிக்கல் சயின்சஸ் (ஐஎம்பிசிஏஎம்எஸ்) உருவாக்கிய தடுப்பு மருந்து குறித்த மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் சேர 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆரோக்கியமான தன்னார்வலர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

இந்த சோதனை ஜனவரி 21- ஆம் தேதி தொடங்கும். ஆர்வமுள்ளவர்கள் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளை அடிப்படையாகக் கொண்ட ஒன்பது மருத்துவ ஆராய்ச்சி மையங்களை தொடர்புகொண்டு பதிவுபெறலாம்.

#TamilSchoolmychoice

ஆர்வமுள்ள நபர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ள அருகிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி மையத்தை தொடர்பு கொள்ளலாம்:

சுங்கை புலோ மருத்துவமனை, சிலாங்கூர் – 011-1004 5343
அம்பாங் மருத்துவமனை, சிலாங்கூர் – 016-728 6617
ராஜா பெர்மாய்சுரி பைனுன் மருத்துவமனை, பேராக் – 011-6331 1654
தைப்பிங் மருத்துவமனை, பேராக் – 019-854 6373
பினாங்கு மருத்துவமனை, பினாங்கு – 016-521 3055
செபெராங் ஜெயா மருத்துவமனை, பினாங்கு – 014-906 5518
சுல்தானா பஹியா மருத்துவமனை, கெடா – 019-554 4976
சுல்தான் அப்துல் ஹாலீம் மருத்துவமனை, கெடா – 017-793 1938
சரவாக் பொது மருத்துவமனை, சரவாக் – 012-310 8108

இந்த ஆய்வு சீனா, மலேசியா மற்றும் பிரேசிலில் 34,020 பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய மிகப் பெரிய சோதனையின் ஒரு பகுதியாகும்.