Home One Line P1 கொவிட்-19: புதிய சம்பவங்கள் 3,306 பதிவு – 4 பேர் மரணம்

கொவிட்-19: புதிய சம்பவங்கள் 3,306 பதிவு – 4 பேர் மரணம்

629
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (ஜனவரி 18) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகமான அளவில் 3,306 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. தொடர்ந்து கொவிட்-19 தொற்றுகள் குறையாமல் இருந்து  வருகின்றன என்பதையே இன்றைய எண்ணிக்கையும் காட்டுகிறது.

இதில் உள்ளூரில் 3,306 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 7 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பெறப்பட்டதாகும்.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 161,740 சம்பவங்கள் இதுவரையில் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

இன்று வரையிலான கடந்த ஒருநாளில் 2,293 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 122,344–ஆக உயர்ந்துள்ளது.

இன்னும், 38,791 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 226 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 94 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்று ஒரே நாளில் 4 பேர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 605-ஆக உயர்ந்துள்ளது.

மாநிலங்கள் அளவில் தொடர்ந்து அதிக தொற்றுகளுடன் சிலாங்கூர் முன்னணியில் இருக்கிறது. 1,213 சம்பவங்கள் இந்த மாநிலத்தில் பதிவாகி உள்ளன. அடுத்து சபாவில் 432 சம்பவங்கள் பதிவான நிலையில், கோலாலம்பூரில் 250 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அடுத்த நிலையில் ஜோகூரில் அதிகமான அளவில் 329 சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. மற்ற மாநிலங்களில் உள்ள தொற்றுகளின் எண்ணிக்கையை மேலே உள்ள வரைபடத்தில் காணலாம்.