Home One Line P1 சிலாங்கூர்: மக்களுக்கு உதவ சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 100,000 ரிங்கிட் ஒதுக்கீடு

சிலாங்கூர்: மக்களுக்கு உதவ சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 100,000 ரிங்கிட் ஒதுக்கீடு

367
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிலாங்கூர் அரசாங்கம் அதன் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தலா 100,000 ரிங்கிட் மற்றும் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் 50,000 ரிங்கிட் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இது அனைத்துக் கட்சி சார்ந்தவர்களுக்கு அளிக்கப்படும்.

சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தனது முகநூல் பக்கத்தில் இன்று சிறப்பு அறிவிப்பில் இதனை வெளியிட்டார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு விரைவில் வழங்கப்படும் என்று அமிருடின் கூறினார்.

#TamilSchoolmychoice

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு அரிசி, எண்ணெய், மாவு மற்றும் பதிவு செய்யப்பட்ட உணவு, மற்றும் கொவிட் -19 தொற்றுநோயின் போது மக்களுக்கு பிற உதவிகளை வழங்குவதற்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

“தொற்றுநோய் நிலைமை மோசமடைந்து வருகிறது. இதற்கு மாநில அரசு தொடர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும் மற்றும் சிலாங்கூர் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.