Home One Line P1 கொவிட்-19: புதிய 3,631 சம்பவங்கள் – இதுவரை இல்லாத அளவுக்கு 18 பேர் மரணம்

கொவிட்-19: புதிய 3,631 சம்பவங்கள் – இதுவரை இல்லாத அளவுக்கு 18 பேர் மரணம்

433
0
SHARE
Ad

noor-hisham-health-min-07072020கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 22) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகமான அளவில் 3,631 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன.

அதே வேளையில் நாடு இதுவரை காணாத அளவுக்கு 18 மரணங்களும் பதிவாகியிருக்கின்றன.

உள்ளூரில் 3,625 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 6 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பெறப்பட்டதாகும்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 176,180 சம்பவங்கள் இதுவரையில் பதிவாகி உள்ளன.

இன்று வரையிலான கடந்த ஒருநாளில் 2,554 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 132,706–ஆக உயர்ந்துள்ளது.

இன்னும், 42,814 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 251 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 102 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்று ஒரே நாளில் 18 பேர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 660-ஆக உயர்ந்துள்ளது.

மாநிலங்களைப் பொறுத்தவரையில் சிலாங்கூர் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. 782 சம்பவங்கள் சிலாங்கூரில் மட்டும் பதிவாகியுள்ளன. அடுத்த நிலையில் ஜோகூர் 466 தொற்றுகளைப் பதிவு செய்தது.

சபா 453 சம்பவங்களைப் பதிவு செய்த நிலையில் கோலாலம்பூர் 435 தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது.