Home One Line P1 கொவிட்-19: புதிதாக 3,680 சம்பவங்கள் பதிவு- 7 பேர் மரணம்

கொவிட்-19: புதிதாக 3,680 சம்பவங்கள் பதிவு- 7 பேர் மரணம்

382
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (ஜனவரி 27) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகமான அளவில் 3,680 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன.

உள்ளூரில் 3,674 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 6 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பெறப்பட்டதாகும்.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 194,114 சம்பவங்கள் இதுவரையில் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

இன்று வரையிலான கடந்த ஒருநாளில் 1,858 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 151,018–ஆக உயர்ந்துள்ளது.

இன்னும், 42,389 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 314 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 122 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்று ஒரே நாளில் 7 பேர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 707-ஆக உயர்ந்துள்ளது.

மாநிலங்களைப் பொறுத்தவரையில் இன்று ஜோகூரில் அதிகமான சம்பவங்கள் பதிவாகி உள்ளன. ஜோகூரில் 1,069 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. சிலாங்கூரில் 822 சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. கோலாலம்பூரில் 698 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சபாவில் 295 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.