Home One Line P1 பிரதமர் பதவி விலக, நீதிமன்றம் சட்டத்துறைத் தலைவருக்கு அறிவுறுத்த வேண்டும்

பிரதமர் பதவி விலக, நீதிமன்றம் சட்டத்துறைத் தலைவருக்கு அறிவுறுத்த வேண்டும்

440
0
SHARE
Ad

கோலாலம்பூர்: துன் டாக்டர் மகாதிர் முகமட்டின் நம்பிக்கையான ஆதரவாளரான கைருடின் அபு ஹசான், சட்டத்துறைத் தலைவர் இட்ரிஸ் ஹருண், பிரதமர் மொகிதின் யாசினை பதவி விலகுமாறு அறிவுறுத்துமாறு நீதிமன்றத்தில் வழக்கு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

தனது வழக்கறிஞர் முகமட் ஹனிப் காத்ரி அப்துல்லா மூலம், கைருடின், கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு மனுவை நேற்று தாக்கல் செய்தார்.

மாமன்னருக்கு ஆலோசனை வழங்குவதற்காக சட்டத்துறைத் தலைவர், தனது கடமையை நிறைவேற்ற தவறிவிட்டார் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

மொகிதினுக்கு இனி பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லை, எனவே, இனி மாமன்னருக்கு ஆலோசனைக் கூறும் தகுதி அவருக்கு இல்லை என்று கைருடின் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி 9-ஆம் தேதி, மச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் அகம்ட் ஜஸ்லான் யாகோப் மொகிதினின் தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றதை அடுத்து, நாடாளுமன்றத்தில் 220 பிரதிநிதிகளில் 110 பேர் மட்டுமே தேசிய முன்னணிக்கு ஆதரவாக இருப்பது குறிப்பிடத்தகக்து.