Home One Line P1 கொவிட்-19: 14 பேர் மரணம்- 3,288 பேருக்கு தொற்று

கொவிட்-19: 14 பேர் மரணம்- 3,288 பேருக்கு தொற்று

355
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (பிப்ரவரி 10) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 3,288 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இதில் 3,283 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 5 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால் பதிவானவை.

இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 251,604- ஆக அதிகரித்துள்ளன.

#TamilSchoolmychoice

கடந்த ஒரு நாளில் மட்டும் 1,929 பேர் குணமடைந்து இல்லம் திரும்பியிருக்கின்றனர். தொற்றுகளில் இருந்து குணமாகி இல்லம் திரும்பியவர்களின் எண்ணிக்கை 198,495 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய நிலையில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 52,186 ஆகும்.

சிகிச்சை பெற்று வருபவர்களில் 285 பேர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது. அவர்களில் 131 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

இன்றைய ஒரு நாளில் 14 மரணங்கள் பதிவானதைத் தொடர்ந்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 923 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலங்கள் அளவில் மிக அதிகமான சம்பவங்கள் சிலாங்கூரில் பதிவாகி உள்ளன. 1,757 சம்பவங்கள் சிலாங்கூரில் மட்டும் பதிவாகி உள்ளன. இதை அடுத்து 369 சம்பவங்கள் ஜோகூரிலும், கோலாலம்பூரில் 408 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.