Home One Line P1 2015 ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்: யார் முதல் படியை எடுப்பது குறித்து அமெரிக்கா-ஈரான் முரண்

2015 ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்: யார் முதல் படியை எடுப்பது குறித்து அமெரிக்கா-ஈரான் முரண்

589
0
SHARE
Ad

வாஷிங்டன்: 2015 ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு திரும்புவது குறித்து தெஹ்ரான் மற்றும் முக்கிய உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர், ஈரானின் அழுத்தத்திற்கு பதிலளிக்கும் வகையில் கூடுதல் நடவடிக்கைகள் எதுவும் எடுக்க அமெரிக்கா திட்டமிட்டவில்லை என்று வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க யார் முதல் படியை எடுக்க வேண்டும் என்பதில் தெஹ்ரானும், வாஷிங்டனும் முரண்பட்டுள்ளன.

முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா முதலில் நீக்க வேண்டும் என்று ஈரான் கூறுகிறது, அதே நேரத்தில் தெஹ்ரான் இந்த ஒப்பந்தத்திற்கு இணங்க திரும்ப வேண்டும் என்று வாஷிங்டன் கூறுகிறது.

#TamilSchoolmychoice

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டிரம்ப் கைவிட்ட டெஹ்ரான் அணு ஆயுதங்களை வாங்குவதைத் தடுக்கும் நோக்கில், இரு நாடுகளும் இந்த ஒப்பந்தத்திற்குத் திரும்புவது குறித்து ஈரானுடன் பேசத் தயாராக இருப்பதாக அமெரிக்கா வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

அமெரிக்க தூதர் ரிச்சர்ட் மில்ஸ் வியாழக்கிழமை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு பேட்டியளித்தபோது, ​​செப்டம்பர் மாதம் ஈரான் மீது அனைத்து பொருளாதாரத் தடைகளையும் அமெரிக்கா இரத்துசெய்கிறது என்று கூறினார்.

அமெரிக்க பொருளாதாரத் தடைகளை நீக்கியவுடன் தெஹ்ரான் தனது அணுசக்தி திட்டத்தில் நடவடிக்கைகளை உடனடியாக மாற்றியமைக்கும் என்று அதன் வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஸரீப் கூறினார்.

ஆனால், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, ஈரானுடன் இராஜதந்திர உரையாடலை மேற்கொள்வதற்கு கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க எந்த திட்டமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.