Home One Line P1 கொவிட்-19: 2,192 புதிய சம்பவங்கள் பதிவு – அறுவர் மரணம்

கொவிட்-19: 2,192 புதிய சம்பவங்கள் பதிவு – அறுவர் மரணம்

330
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (பிப்ரவரி 22) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 2,192 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதில் 2,189 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 3 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால் பதிவானவை.

இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 285,761 ஆக அதிகரித்துள்ளன.

#TamilSchoolmychoice

கடந்த ஒரு நாளில் மட்டும் 3,414 பேர் குணமடைந்து இல்லம் திரும்பியிருக்கின்றனர். தொற்றுகளில் இருந்து குணமாகி இல்லம் திரும்பியவர்களின் எண்ணிக்கை 252, 623 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய நிலையில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 32,076 ஆகும்.

சிகிச்சை பெற்று வருபவர்களில் 199 பேர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது. அவர்களில் 91 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

இன்றைய ஒரு நாளில் 6 மரணங்கள் பதிவானதைத் தொடர்ந்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 1,062- ஆக உயர்ந்துள்ளது.

மாநிலங்கள் அளவில் மிக அதிகமான சம்பவங்கள் சிலாங்கூரில் பதிவாகி உள்ளன. சுமார் 910 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. 303 சம்பவங்கள் கோலாலம்பூரில் பதிவாகி உள்ளன. இதை அடுத்து சரவாக்கில் 221 சம்பவங்கள் பதிவாகின. ஜோகூரில் 211 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.