Home One Line P1 பொதுத் தேர்தலில் அம்னோவுடனான கூட்டணியை பிகேஆர் நிராகரிக்கவில்லை

பொதுத் தேர்தலில் அம்னோவுடனான கூட்டணியை பிகேஆர் நிராகரிக்கவில்லை

417
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தை பணியைத் தொடங்கியுள்ளதாக அதன் தலைவர் அன்வர் இப்ராகிம் தெரிவித்தார்.

உப்கோ சமர்ப்பித்த திட்டங்கள் உட்பட பிற நட்பு கட்சிகளுக்கான இடங்களையும் நம்பிக்கை கூட்டணி பேசி வருவதாக அன்வார் தெரிவித்தார்.

“தேர்தல் இயந்திரங்களின் ஒத்துழைப்பு மற்றும் குறிப்பாக நம்பிக்கை கூட்டணி கூறு கட்சிகள் சம்பந்தப்பட்ட தொகுதி பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவது, அத்துடன் பிற கூட்டணி கட்சிகளுக்கான ஒதுக்கீட்டை கணக்கில் எடுத்துக்கொள்வது உள்ளிட்ட பல விஷயங்களை முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்று அன்வார் கூறினார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், பிகேஆர் தகவல் தொடர்பு இயக்குனர் பாஹ்மி பாட்சில், நம்பிக்கை கூட்டணி கூறு கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பேச்சுவார்த்தைகள் அடுத்தக் கட்டத்தை எட்டியுள்ளன என்றார்.

இந்த நிலையில், மற்ற எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்கு முன்பு அவர்கள் கூட்டணிக் கட்சி மீது கவனம் செலுத்துவதாக அவர் கூறினார்.

அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோவுடன் பணிபுரியும் வாய்ப்பையும் இருவரும் நிராகரிக்கவில்லை. முன்னதாக, அம்னோ, ஜசெக- பிகேஆருடன் இணைந்து செயல்படாது என்று கூறியிருந்தது.

“எந்த கட்சியுடனான ஒத்துழைப்பு பற்றிய கேள்வி இதுவரை எழவில்லை. நாங்கள் நல்லாட்சியை ஆதரிக்கிறோம், ஊழலை நிராகரிக்கிறோம், எல்லா வகையான முறைகேடுகளையும் நிராகரிக்கிறோம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பாதுகாப்பை ஏற்றுக்கொள்கிறோம், “என்று அன்வார் கூறினார்.