இதில் 1,359 பேர் உள்நாட்டினர். ஒருவர் வெளிநாட்டினிலிருந்து திரும்பியவர் ஆவார். இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 338,168 ஆக அதிகரித்துள்ளன.
கடந்த ஒரு நாளில் மட்டும் 1,491 பேர் குணமடைந்து இல்லம் திரும்பியிருக்கின்றனர். தொற்றுகளில் இருந்து குணமாகி இல்லம் திரும்பியவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 322,416 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய ஒரு நாளில் 2 மரணங்கள் பதிவானதைத் தொடர்ந்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 1,248- ஆக உயர்ந்துள்ளது.
மாநிலங்கள் அளவில் மிக அதிகமான சம்பவங்கள் 356 என்ற எண்ணிக்கையில் சிலாங்கூரில் பதிவாகி உள்ளன. அடுத்ததாக சரவாக்கில் 308 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.