Home One Line P1 தென்னமரம் தோட்டம்: ஊழல் குற்றச்சாட்டு விசாரணைக்கு சிலாங்கூர் ஒத்துழைக்கும்

தென்னமரம் தோட்டம்: ஊழல் குற்றச்சாட்டு விசாரணைக்கு சிலாங்கூர் ஒத்துழைக்கும்

1025
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தஞ்சோங் காராங் தென்னமரம் தோட்டத்தில் இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய விசாரணையில் ஒத்துழைக்க சிலாங்கூர் அரசு தயாராக உள்ளது.

புதன்கிழமை நடந்த போராட்டத்தின்போது சுமார் 100 குடியேறிகள் எழுப்பிய குற்றச்சாட்டுகள் உண்மை எனக் கண்டறியப்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் அரசியல் செயலாளரும் புக்கிட் மெலாவதி சட்டமன்ற உறுப்பினருமான சுவைரியா சுல்கிப்லி தெரிவித்தார்.

“வெளிப்படைத்தன்மை ஆகிய கொள்கைகளுக்கு ஏற்ப, சிலாங்கூர் நிர்வாகம் அனைத்து மட்டங்களிலும் ஊழல் அல்லது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதற்கான எந்தவொரு கூறுகளிலும் சமரசம் செய்யாது. எனவே, மாநில அரசு தயாராக உள்ளது. அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைக்கும்,” என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

#TamilSchoolmychoice

விசாரணை அதிகாரிகளைத் தவிர, சிலாங்கூர் நிலம் மற்றும் கனிம அலுவலகமும் இந்த விவகாரம் குறித்து உள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக சுவைரியா தெரிவித்தார்.

கடந்த 40 ஆண்டுகளாக தாங்கள் கவாழ்ந்து வந்த மற்றும் பணிபுரிந்த 800 ஏக்கர் நிலப்பரப்பில் குத்தகைக்கு கொடுப்பதற்கு முன்பு நம்பிக்கை கூட்டணி தலைமையிலான மாநில நிர்வாகம் எந்த கலந்துரையாடலையும் நடத்தவில்லை என்று தென்னமர தோட்ட மக்கள் கூறியுள்ளனர்.