Home One Line P1 5 மாநிலங்களில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிப்பு!

5 மாநிலங்களில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிப்பு!

515
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர், பினாங்கு, கிளந்தான் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று அறிவித்தார்.

சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர், பினாங்கு மற்றும் கிளந்தானில் ஏப்ரல் 28 வரை இந்த கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும். சரவாக்கில் ஏப்ரல் 26 வரை நீடிக்கும்.

இதற்கிடையில், பிற மாநிலங்கள் மற்றும் கூட்டரசு பிரதேசங்களில் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருக்கும்.

#TamilSchoolmychoice

மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு அனுமதி இல்லை.