Home One Line P1 மூன்றாவது முறையாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படாது

மூன்றாவது முறையாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படாது

414
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மூன்றாவது முறையாக செயல்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் சங்கங்கள் மற்றும் வர்த்தக மன்றங்களுக்கு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தொழில்துறைகள் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், குறிப்பாக பணியாளர் தங்குமிட வசதிகள் சம்பந்தப்பட்டவை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

“தயவுசெய்து பாதுகாப்பான மற்றும் பொருத்தமான வசதிகளைத் தொடர்ந்து வழங்கவும். இது நெரிசல் இல்லாததை உறுதிப்படுத்தவும், தொழிலாளர்களின் வீடுகளின் தூய்மையை மேம்படுத்தவும் உதவும். இது தொற்று பரவும் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். இது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீண்டும் செயல்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை என்பதற்கான நினைவூட்டலாகும்.

#TamilSchoolmychoice

“இருப்பினும், பரவலைத் தூண்டும் இடங்களில் இலக்கு வைக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை செயல்படுத்தப்படும்,” என்று அவர் கூறினார்.