Home One Line P1 நோன்பு பெருநாள்: சொந்த ஊர்களுக்குத் திரும்புவது ஒத்திவைப்பு

நோன்பு பெருநாள்: சொந்த ஊர்களுக்குத் திரும்புவது ஒத்திவைப்பு

438
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அடுத்த மாதம் நோன்பு மாத கொண்டாட்டத்தை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்கான பயண நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா இன்று தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமையன்று, தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், நோன்பு கொண்டாட்டத்தை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்புவது குறித்து சுகாதார அமைச்சு முடிவு செய்யு என்று கூறியிருந்தார்.

பெருநாளின் போது சொந்த ஊர்களுக்கு செல்லும் அனுமதி குறித்த முடிவு சுகாதார அமைச்சின் ஆலோசனையின் பேரில் எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

ரமலான் சந்தை நடவடிக்கைகளில் தொற்றுநோய்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வந்தால், ரமலான் சந்தைகள் மூடப்படும் என்றும் டாக்டர் அடாம் கூறினார்.