Home இந்தியா கொவிட்-19: ஏப்ரல் 22 முதல் மகாராஷ்டிராவில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்

கொவிட்-19: ஏப்ரல் 22 முதல் மகாராஷ்டிராவில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்

805
0
SHARE
Ad

புது டில்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகமான கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதால், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்று (ஏப்ரல் 22) இரவு 8 மணி முதல் அங்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன. இவை வரும் மே ஒன்றாம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்களின் வருகை 50 விழுக்காட்டிலிருந்து இருந்து 15 விழுக்காடாக குறைக்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

அத்தியாவசிய சேவைகள், செல்லப் பிராணிகள் கடை, தகவல் மையங்கள், எண்ணெய் நிலையங்கள் 50 விழுக்காடு ஊழியர்களுடன் இயக்கப்படும். போக்குவரத்து சேவைகள் 50 விழுக்காடு பயணிகளுடன் இயக்கப்படும்.

இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.