மின்னல் வானொலியின் செய்திப் பிரிவில் பணியாற்றும் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று கண்டதால், செய்திகளின் தயாரிப்பும், ஒலியேற்றமும் தடைப்பட்டதாக மின்னல் வானொலி தெரிவித்தது.
அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை வானொலி செய்திகள் தற்காலிகமாக இடம் பெறாது என்றும் இதுகுறித்த விளக்கத்தை வானொலி அறிவிப்பாளர்கள் அறிவித்து வருகின்றனர் என்றும் மின்னல் வானொலி நிருவாகம் வருத்தத்துடன் குறிப்பிட்டது.
எதிர்பாராத இந்த நிலைமையால்தான் தமிழ் செய்திகள் ஒலியேறவில்லை என்றும் இதனால் ஏமாற்றமடைந்த இலட்சக்கணக்கான வானொலி நேயர்களுக்கு தங்களின் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் மின்னல் வானொலி தெரிவித்தது.