Home இந்தியா தமிழ் நாடு : போடி நாயக்கனூர் – கடும் போராட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலை

தமிழ் நாடு : போடி நாயக்கனூர் – கடும் போராட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலை

459
0
SHARE
Ad

சென்னை : தமிழ் நாட்டின் சட்டமன்றத் தேர்தல்களில் போடிநாயக்கனூர் தொகுதியில் இறுதி நிலவரமாக முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெற்றி பெற்றிருக்கிறார்.

அவருக்கு 30,733 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் தங்கத் தமிழ் செல்வன் 27,013 வாக்குகள் பெற்று பின்தங்கியிருக்கிறார்.

இன்று காலை முடிவுகள் வரத் தொடங்கியது முதல் இருவரும் மாறி மாறி பின்னடைவுகளைச் சந்தித்தனர். ஒரு கட்டத்தில் ஓ.பன்னீர் தோல்வியடைவார் என்றே கருதப்பட்டது.

#TamilSchoolmychoice

இருப்பினும் பன்னீர் செல்வம் மீண்டும் வெற்றி பெற்றிருப்பது, அதிமுகவுக்கு ஒரு பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது.